Friday, June 16, 2017

உளுந்தங்களி வயது வந்த சிறுமியர்க்கு

அந்த காலத்தில் பெண் பிள்ளைகள் வயதுக்கு வந்துவிட்டால், அவர்களது கர்ப்பப்பை பலம் பெறுவதற்காக உளுந்தங்களி கொடுக்கும் வழக்கம் இருந்தது. இந்த களியில் வெல்லம், உளுந்து, நல்லெண்ணெய் சேருவதால் இரும்புச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து ஆகியவை நிறையவே காணப்படுகிறது. இவை கர்ப்பப் பையை பலப்படுத்துகின்றன.

இந்த உளுந்தங்களியை செய்வது எப்படி தெரியுமா?

அரை கப் உளுந்தை வாணலியில் வறுத்து, அதோடு 1/2 கப் அரிசி சேர்த்து மாவாக்கி சலித்துக்கொள்ளவும்.

2 கப் உடைத்த கருப்பட்டி வெல்லத்தோடு தண்ணீர் 2 கப் விட்டு சூடாக்கி, வெல்லம் கரைந்ததும் அரை வடிகட்டி தனியாக எடுத்துக்கொள்ளவும்.

வடிகட்டி எடுத்த வெல்லக்கரைசலுடன் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து சூடாக்கவும். அது நன்கு கொதிக்கும்போது மாவை அதனுடன் சேர்த்து நன்கு கிளறி, குறைந்த தணலில் சுமார் 10 நிமிடங்கள் வரை வேக விடவும்.

பின்னர், அடுப்பில் இருந்து இறக்கி, 2 டேபிள் ஸ்பூன் நெய்விட்டு கலந்து சாப்பிடலாம்.